2 நாட்களாக தேடப்பட்டுவந்த பெண் சடலமாக மீட்பு..! கொலை செய்து குளியலறைக்குள் புதைத்த கொரூரம்..

ஆசிரியர் - Editor I
2 நாட்களாக தேடப்பட்டுவந்த பெண் சடலமாக மீட்பு..! கொலை செய்து குளியலறைக்குள் புதைத்த கொரூரம்..

அம்பாறை மாவட்டம் திருக்கோவில்- விநாயகா்புரம் பகுதியில் கடந்த திங்கள் கிழமை காணாமல்போனதாக கூறப்பட்ட பெண் அவருடைய வீட்டின் பின்புறத்திலுள்ள குளியலறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவா் அதே பகுதியை சோ்ந்த திருமதி கிருபைராஜா கனகம்மா வயது 53 என அடையாளம் காணப்பட்டுள்ளது. திருக்கோவில் விநாயகபுரம் இல - 02 பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ள வீட்டில் 

குறித்த பெண் தனது மகளின் ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை குறித்த பெண் காலை 11.30 மணியளவில் அயல் வீட்டுக்கு சென்றிருந்தவேளை 

தனது வீட்டில் நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டைப் பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு தனது வீட்டுக்கு சென்றதாக அயல் வீட்டார் தெரிவித்தனர். இந்நிலையில் வயல் வேலை முடித்து 12.00 மணியளவில் வீடு திரும்பிய 

பெண்ணின் கணவரான சண்முகநாதன் கிருபைராசா என்பவர் வீட்டு மண்டபத்தில் குழந்தை தனியாக அழுது கொண்டு இருப்பதைப் கண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு மனைவியை அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் 

என தேடியுள்ளார் ஆனால் மனைவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருக்கோவில் பொலிசாருக்கு கணவரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிசார் மற்றும் 

உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் குடும்பத்தினரும் பெண்ணைத் தேடி வந்தனர். இந்நிலையில் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் 

பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை (12) வீட்டின் பின்புறமாக கட்டப்பட்டுக் கிடந்த குளியல் அறையில் புதைக்கப்பட்ட நிலையில் 

சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதியும், மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான பி.சிவகுமார் மேற்பார்வையில் குறித்த பெண்ணின் சடலம் பொலிசாரால் தோண்டி எடுக்கப்பட்டதுடன் 

சடலத்தின் முகத்தில் இரத்த கசிவுகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடயங்கள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதுடன் திருக்கோவில் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை 

விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு உள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு