நாட்டைவிட்டு வெளியேறும் ஜனாதிபதி, பிரதமா்..!

ஆசிரியர் - Editor I
நாட்டைவிட்டு வெளியேறும் ஜனாதிபதி, பிரதமா்..!

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தஜிகிஸ்த்தான் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளாா். 

ஜனாதிபதி இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை தஜிகிஸ்தானுக்குச் பயணிக்கவுள்ளார்.

தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் நடைபெறும், ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் 

தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார். அவர் நாளை மறுநாளே நாடு திரும்புவார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு