கோத்தாவை சந்திக்க சிங்கப்பூா் செல்கிறாராம் ரணில்..! மோடி வருகையின் எதிரொலியா..

ஆசிரியர் - Editor I
கோத்தாவை சந்திக்க சிங்கப்பூா் செல்கிறாராம் ரணில்..! மோடி வருகையின் எதிரொலியா..

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸவை சந்திக்க பிரதமா் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளாா். 

சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் கோத்தபாய ராஜபக்ச சிகிச்சை பெற்று வருகின்றார்.

கோத்தபாயவின் சுகநலன்களை விசாரித்தல் மற்றும் சில தனிப்பட்ட காரணிகளுக்காக பிரதமர் சிங்கப்பூருக்கு விஜயம் செய்ய உள்ளார்.

பிரதமரும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இன்று நள்ளிரவு சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

சிங்கப்பூரில் பிரதமர் ரணில் மருத்துவ பரிசோதனை ஒன்றையும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோத்தபாயவைத் தவிர சிங்கப்பூரில் வேறும் சிலருடனும் பிரதமர் சந்திப்புக்களை நடத்த உள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு