உரம் ஏற்றிச் சென்ற பாரவூா்தி தடம் புரண்டு விபத்து..! 7 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
உரம் ஏற்றிச் சென்ற பாரவூா்தி தடம் புரண்டு விபத்து..! 7 போ் படுகாயம்..

வவுனியா- மடுக்கந்த பகுதியில் உரம் ஏற்றிச் சென்ற பாரவூா்தி தடம் புரண்டதில் 7 போ் காயமடைந்துள்ளனா். 

வவுனியா, மடுகந்த தேசிய பாடசாலைக்கு முன்பாக இந்த அசம்பாவிதம்  நடந்துள்ளது.

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி உரம் ஏற்றிச் சென்ற பாரவூர்தியே விபத்துக்குள்ளானது.

சாரதியால் பாரவூர்தியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் விபத்து நடந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு