இனம் சாா்ந்து எனது கடமைகள் அமையாது..! கூறுவது கிழக்கின் புதிய ஆளுநா்.

ஆசிரியர் - Editor I
இனம் சாா்ந்து எனது கடமைகள் அமையாது..! கூறுவது கிழக்கின் புதிய ஆளுநா்.

கிழக்கில் வாழும் எந்த இனம் சாா்ந்தும் தாம் கடமை செய்யமாட்டேன். என புதிதாக பதவியேற்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநா் ஷான் விஜயலால் டி சில்வா கூறியிருக்கின்றாா். 

திருகோணமலையில் இன்று கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

எந்த ஒரு இனத்தை சார்ந்து கடமையாற்றாமல் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உயர்ந்த சேவையினை வழங்குவேன்.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபையை கொண்டு செல்வது என்பது ஆளுநர் என்ற ரீதியில் எனது பாரிய பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பதவி விலகியதை தொடர்ந்து, மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய ஷான் விஜயலால் டி சில்வா புதிய ஆளுநராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு