பயங்கரவாததத்தின் கொரூரத்தை இலங்கை ஆத்மாவால் தோற்கடிக்க முடியாது..! ஆகவே இந்தியா துணையாக இருக்கும்..

ஆசிரியர் - Editor I
பயங்கரவாததத்தின் கொரூரத்தை இலங்கை ஆத்மாவால் தோற்கடிக்க முடியாது..! ஆகவே இந்தியா துணையாக இருக்கும்..

உயிா்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை அந்தோனியாா் ஆலயத்திற்கு சென்ற இந்திய பிரதமா் நரேந்திர மோடி படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக பிராா்த்தனை செய்தாா். 

இதனை தொடா்ந்து குண்டு தாக்குதல் தொடா்பாக புகைப்படங்களை பாா்வையிட்டாா் பிரதமா் மோடி இதன்போது பேராயா் மல்கம் ரஞ்சித் மற்றும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலா் கலந்து கொண்டிருந்தனா். 

இந்த விஜயத்தின் பின்னா் தனது உத்தியோகபூா்வ ருவிட்டா் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமா் மோடி “இலங்கை மீண்டும் உயர்ந்த நிலைக்கு செல்லும் என நான் நம்புகிறேன். பயங்கரவாதத்தின் கொடூரமான செயல்கள் 

இலங்கை என்ற ஆத்மாவால் தோற்கடிக்க முடியாது. இலங்கை மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது..” என பதிவிட்டுள்ளாா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு