யாழ்.நகருக்குள் சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வீடு புகுந்து கொள்ளை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகருக்குள் சன நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வீடு புகுந்து கொள்ளை..

யாழ்.நகாில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பெருமாள் கோவிலடி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளது. 

வீட்டின் உரிமையாளர்களான கணவன் – மனைவி வேலைக்கு சென்றுள்ளனர். பிள்ளைகளும் பாடசாலை சென்றுள்ளனர். அச்சமயம் வீட்டில் யாருமற்ற வேளை புகுந்த திருடர்கள் வீட்டின்னுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தி 

வீட்டில் இருந்த 5 பவுண் நகையை திருடி சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பகுதியில் கடைத்தொகுதிகள் காணப்படுவதுடன் , தனியார் கல்வி நிறுவனங்களும் காணப்படுவதனால் பகலில் சன நடமாட்டம் அதிகமாக இருக்கும். என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு