அண்ணனை இலக்கு வைத்து தம்பி மீது சரமாாி வாள்வெட்டு..! நவாலியில் பயங்கரம்.

ஆசிரியர் - Editor I
அண்ணனை இலக்கு வைத்து தம்பி மீது சரமாாி வாள்வெட்டு..! நவாலியில் பயங்கரம்.

யாழ்.நவாலி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் நடாத்திய தாக்குதலில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான். 

அண்ணனை இலக்கு வைத்துத் தாக்குவதற்கு வந்த கும்பல் 16 வயது மாணவனான தம்பியை வாளால் வெட்டிக்காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. 

தலையில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 குறித்த  சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது.

முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வீடு புகுந்த கும்பல், அடாவடியில் ஈடுபட்டதுடன், மாணவனை வெட்டிக்காயப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு