3 விபத்துக்கள்..! 4 பாடசாலை மாணவா்கள் உட்பட 5போ் உயிாிழப்பு.

ஆசிரியர் - Editor I
3 விபத்துக்கள்..! 4 பாடசாலை மாணவா்கள் உட்பட 5போ் உயிாிழப்பு.

இலங்கையில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற 3 விபத்துக்களில் 4 பாடசாலை மாணவா் உள்ளிட்ட 5 போ் உயிாிழந்திருக்கின்றனா். 

கெக்கிராவை, கொரஸ்கல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கெப் வண்டி மோதி இன்று முற்பகல் 8 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.16 வயதபான மாணவர்கள் மூன்று பேரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொஸ்கம சாலாவ பகுதியிர் இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றுடன் கெப் வண்டி மோதி நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – மூங்கிலாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்

24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனியார் பஸ்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதி நேற்று (07) மாலை விபத்து இடம்பெற்றுள்ளது.

விசுவமடு – தேராவில் பகுதியை சேர்ந்த இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு