பதவி விலகியவா்கள் மஹிந்த வீட்டில்..! பதவி விலகலுக்கான காரணத்தை கூற போனாா்களாம்..

ஆசிரியர் - Editor I
பதவி விலகியவா்கள் மஹிந்த வீட்டில்..! பதவி விலகலுக்கான காரணத்தை கூற போனாா்களாம்..

பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஒரு தொகுதியினா் இன்று எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸவை இன்று நோில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனா். 

இதன்போது முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். எனவே தாங்கள் முன்வந்து நாட்டு மக்களுக்கு இது பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். 

மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலமையை இல்லாதொழிக்க பங்களிப்பு வழங்க வேண்டும் என்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்தனர்.

இதன் போது தமது பதவி விலகல் தொடர்பில் காரணங்களையும் எடுத்துக் கூறினர் என்று அறிய முடிகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு