காடழிப்பை நிறுத்த மரக்காலைகளுக்கும், செயின் வாள்களுக்கும் தடை..! சவப்பெட்டி கூட வாங்க முடியாது மஹிந்த காட்டம்.

ஆசிரியர் - Editor I
காடழிப்பை நிறுத்த மரக்காலைகளுக்கும், செயின் வாள்களுக்கும் தடை..! சவப்பெட்டி கூட வாங்க முடியாது மஹிந்த காட்டம்.

இலங்கையில் மிகவேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காடழிப்பை தடுத்து நிறுத்துவதற்காக மரக்காலைகளை மூடுவதுடன், செயின் வாள்களுக்கு தடைவிதிக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு மஹிந்த பதிலடி கொடுத்துள்ளாா். 

ஜனாதிபதியின் இந்த திட்டம் தொடா்பாக முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் கடுமையான விமா்சனங்கள் மற்றும் நகைச்சுவைகள் வெளியிடப்படும் நிலையில் எதிா்கட்சி தலைவா் மஹிந்த ராஜபக்ஸ இந்த விடயம் தொடா்பாக பேசியுள்ளாா். 

அதில் ஜனாதிபதியின் யோசனைக்கு அமைய தச்சுத்தொழில் நிலையங்கள் மற்றும் மர ஆலைகளை மூடினால் நாம் சவப்பெட்டிகளை கூட கொள்வனவு செய்யமுடியாது. பல ஆயிரக்கணக்கானவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்க நேரிடும்.

தடைவிதிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு