வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்கள் எங்கே..? ஜனாதிபதி வருகையின்போது வீதியில் இறங்கிய மக்கள்..

ஆசிரியர் - Editor I
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்கள் எங்கே..? ஜனாதிபதி வருகையின்போது வீதியில் இறங்கிய மக்கள்..

ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன வருகையின்போது முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா். 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது 824ஆவது நாளில், தமது உறவுகள் எங்கே, எனக் கேட்டு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, பெருமளவான காவற்றுறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


முல்லையிலிருந்து வி.சரவணன்..

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு