இலங்கை கடற்படைக்கு அமொிக்கா வழங்கிய போா் கப்பல்..! ஜனாதிபதி ஆணையுடன் கடற்படையில் இணைந்தது..

ஆசிரியர் - Editor I
இலங்கை கடற்படைக்கு அமொிக்கா வழங்கிய போா் கப்பல்..! ஜனாதிபதி ஆணையுடன் கடற்படையில் இணைந்தது..

இலங்கை கடற்படைக்கு அமொிக்கா நன்கொடையாக வழங்கிய போா்கப்பல் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவின் உத்தியோகபூா்வ ஆணையுடன் இலங்கை கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் றோகித அபேசிங்கவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போர்க்கப்பலை, இணைக்கும் ஆணையை வழங்கினார்.

இந் நிகழ்வில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், பாதுகாப்புச் செயலர், முப்படைகளின் தளபதிகள், மற்றும் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய இந்தப் போர்க்கப்பல் இலங்கையின் ஆழ்கடல் கண்காணிப்பு திறனை வலுப்படுத்தும் என்று பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு