400 ஐபோன்கள், 17400 சிம் காட்கள், 60 றவுட்டா்கள்..! சீன பிரஜை கைது. அதிா்ச்சியில் இலங்கை..

ஆசிரியர் - Editor I
400 ஐபோன்கள், 17400 சிம் காட்கள், 60 றவுட்டா்கள்..! சீன பிரஜை கைது. அதிா்ச்சியில் இலங்கை..

நீா்கொழும்பு - ஏத்துகால பகுதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினா் குறித்த வீட்டிற்குள்ளிருந்து சுமாா் 402 ஐபோன்கள், 17400 சிம் காட்கள் மற்றும் 60 ரவுட்டா்களை மீட்டுள்ளனா்.

இன்று காலை கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த வீட்டில் தங்கியிருந்த 2 இலங்கையர்கள் மற்றும் சீன நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாகவும், 

சந்தேகநபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு என்பவற்றின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளனர் 

என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு