பெருமெடுப்பில் மரநடுகை திட்டம்..! பராமாிப்பது யாா்..? வடக்கு ஆளுநா் கவனத்திற்கு.

ஆசிரியர் - Editor I
பெருமெடுப்பில் மரநடுகை திட்டம்..! பராமாிப்பது யாா்..? வடக்கு ஆளுநா் கவனத்திற்கு.

உலக சுற்று சூழல் தினத்தை ஒட்டி வடமாகாண ஆளுநாினால் யாழ்ப்பாணம்- கண்டி வீதியை பசுமை வீதியாக்கும் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மரநடுகை திட்டம் சீராக பேணப்படவில்லை என விமா்சனங்கள் எழுந்துள்ளது. 

உலக சுற்றுசூழல் தினத்தை ஒட்டி கடந்த 5ம் திகதி யாழ்ப்பாணம்- கண்டி வீதியை பசுமை வீதியாக மாற்றம் திட்டத்தின் கீழ் வடக்கு ஆளுநா் சுரேன் ராகவனால் மாங்குளம் பகுதியில் மரநடுகை திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இந்த மரநடுகை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்ட அன்றைய தினமே நடுகை செய்யப்பட்ட மரங்களை சூழ அமைக்கப்பட்ட பாதுகாப்பு கூடுகள் உடைத்து வீழ்த்தப்பட்டதுடன் தண்ணீரும் ஊற்றாமல் இருப்பதாக கூறப்படுகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு