சந்தேகத்திற்கிடமான படகில் கடற்படைக்கு காத்திருந்த அதிா்ச்சி..!

ஆசிரியர் - Editor I
சந்தேகத்திற்கிடமான படகில் கடற்படைக்கு காத்திருந்த அதிா்ச்சி..!

மன்னாா்- பேசாலை கடற்பகுதியில் கைவிடப்பட்ட ரோலா் படகிலிருந்து 140 கிலோ 760 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளை இலங்கை கடற்படையினா் நேற்று கைப்பற்றியுள்ளனா். 

கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த டோலர் படகொன்றிலிருந்து குறித்த கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.பேசாலை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே 

குறித்த டோலர் படகில் இருந்து கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும், குறித்த படகிலிருந்த சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

கைப்பற்றப்பட்ட கேரளக்கஞ்சாவையும் டோலர் படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு