பூஜித, ஹேமசிறிக்கு எதிராக வழக்கு- 7 நீதியரசர்களைக் கொண்டு குழு விசாரணை!

ஆசிரியர் - Editor II
பூஜித, ஹேமசிறிக்கு எதிராக வழக்கு- 7 நீதியரசர்களைக் கொண்டு குழு விசாரணை!

 ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாக, பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 7 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான மனு இன்று புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்று மற்றும் எல்.ரி.பீ தெஹிதெனிய ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இது தொடர்பாக அறிவிக்கப்பட்டது. குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை ஜூலை 12 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு