சதொச வாகனங்களில் பயணித்த சஹ்ரான்! - நிரூபிக்கத் தயார் என்கிறார் விமல் வீரவன்ச

ஆசிரியர் - Editor I
சதொச வாகனங்களில் பயணித்த சஹ்ரான்! - நிரூபிக்கத் தயார் என்கிறார் விமல் வீரவன்ச

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதற்கான சாட்சிகள் உள்ளதாகவும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கதான் தயார் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.     

அமைச்சர் ரிசாத் பதியூதினுக்கு தொடர்பு உண்டு. ஏன் அமைச்சர் என்று கூறுகின்றேன் என்றால் அவர் இன்னமும் அமைச்சர் தான். எங்களை முட்டாளாக்க பதவி விலகுவதாக நாடகமாடினார்கள்.

சஹ்ரானின் தாக்குதலுக்கு சதொசவின் வாகனங்கள் தாக்குதலுக்கு பயன்படுத்தவில்லையா? சஹ்ரான் அதில் பயணிக்கவில்லையா? சாய்ந்தமருந்தில் சஹ்ரானின் மனைவியை அழைத்து செல்ல சதொச வாகனங்கள் பயன்படுத்தவில்லையா? கொழும்பில் பயங்கரவாதிகள் சுற்றி திரிய சதொச வாகனங்கள் பயன்படுத்தவில்லையா? ரிசாத் வாயை திறந்து இல்லை என்று கூறினால் நான் நிரூபித்து காட்டுகிறேன்.

இன்று நிரூபிக்கவில்லை என்றாலும் நாளை நிரூபித்துக் காட்டுகிறேன். அதனை நிரூபிக்க முடியவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்கின்றேன் என வீரவன்ச சவால் விட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு