நீதிமன்றில் பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பியோடிய பெண் கைதி! பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு

ஆசிரியர் - Admin
நீதிமன்றில் பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பியோடிய பெண் கைதி! பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ஒருவர், மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து நேற்று மாலை தப்பி ஓடியுள்ளார். 

பொலிஸாரால் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்று குறித்த நபர் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.     

இந்நிலையில் குறித்த நபர் நீதிமன்றத்தில் இருந்து பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஒடியுள்ளார். இதனை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபரை கைது செய்ய திறந்த பிடியாணை உத்தரவினை ஒன்றையும் நீதிவான் பிறப்பித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு