அவசரமாக ஒன்றுகூடுகின்றனர் முஸ்லீம் தலைவர்கள்

ஆசிரியர் - Admin
அவசரமாக ஒன்றுகூடுகின்றனர் முஸ்லீம் தலைவர்கள்

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கொழும்பில் இன்று காலை அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்று கூடி ஆராயவுள்ளனர்.

அமைச்சர்கள் ரிசார்ட் பதியுதீன் மற்றும் ஆளுநர்மார் ஹிஸ்புல்லாஹ் ,அசாத்சாலி ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி கண்டியில் ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில் ,பதவி விலகல் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

பதவிகளில் இருந்து விலகுவதாயின் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது பதவிகளை விட்டு விலகுவதென்று உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் அது தொடர்பில் ஆராயப்படுமென்றும் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளை பதவி விலக்க இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்ப்டுவதை எதிர்த்து இப்படி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு