யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவும்.

ஆசிரியர் - Admin
யாழ்.மாநகர சபைக்கு முன்பாக வீதியில் வாகனங்களில் செல்வோர் மிக அவதானமாக செல்லவும்.

பாறுக் ஷிஹான்

யாழ்.மாநகர சபையிலிருந்து வேறு ஒரு இடத்திற்கு ஓயில் ரைக்டரில் எடுத்து சென்றபோது கடந்த வெள்ளிக்கிழமை (31) இரவு  அதில் இருந்து சரிந்து வீதியில் ஓயில் ஊற்றப்பட்டுள்ளது. 

இதையடுத்து மாநகர சபை ஊழியர்களால் வீதியில் மணல் போட்டிருந்தனர். எனினும்  பின்னர் மணல் போட்டும்  ஓயில் வழுக்கியமையால்  நேற்றும் சிலர்  மோட்டார் சைக்கிளில் பயணத்தவர்கள் விழுந்துள்ளனர்.

இன்று  திங்கட்கிழமை(3)  நல்லூர் ஆலயத்திற்கு காலாஞ்சி கொடுக்கும் வைபவத்திற்காக காலை மாநகர சபையால் வீதிக்கு நீர் தெளிக்கப்பட்டது. 

இதனால் மணலில் ஓயில் படமம் வீதியில் காய்ந்தநிலையில்   நீர் ஊற்றப்பட்டதால் ஊறி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வழுக்கி விழுந்து படுகாயமடைந்துள்ளனர்.   இதில்   குழுந்தையை ஏற்றிச்சென்ற தாயும் மற்றும் ஒருவரும் விழுந்து சிறு காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து மாநகர பணியாளர்கள் வீதியால் செல்பவர்களை மெதுவாக செல்லுமாறு கூறியதுடன் பின்னர் வீதிக்கு மணல் போடப்பட்டுள்ளது.  இவ்வாறான நிலையில் சிறிய நேரம் மழை  பெய்தாலே மீண்டும் ஓயில் வழுக்கும் நிலையே ஏற்படும். 

எனவே உடனடியாக மாநகர சபை  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வீதியில் உள்ள ஓயில் படிமத்தை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு