யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்! - பாதுகாப்பு அதிகரிப்பு

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்! - பாதுகாப்பு அதிகரிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் அமைச்சர்கள் குழுவும் யாழ்ப்பாணம் வந்துள்ளது. பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினருக்கு யாழ். கோட்டையில் வரவேற்பளிக்கப்பட்டது.     

வரவேற்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் பயணத்தின் போது, யாழ். மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு யாழ். மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இக்கொடுப்பனவுகளை பிரதமர் வழங்கி வைக்கவுள்ளார்.

அதேபோன்று வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

பிரதமரின் யாழ். பயணத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரதமர் தங்கியுள்ள இடம் மற்றும் அவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகள் இடம்பெறுகின்ற பிரதேசங்களிலும் பெருமளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு