பாடசாலைக்கு மாணவி எடுத்துச் சென்ற குண்டுத் தோசைக்கு நேர்ந்த கதி!

ஆசிரியர் - Editor II
பாடசாலைக்கு மாணவி எடுத்துச் சென்ற குண்டுத் தோசைக்கு நேர்ந்த கதி!
பாடசாலைக்கு குண்டு தோசையை எடுத்துச் சென்ற மாணவி, படையினரின் சோதனையால், அதனைப் சாப்பாட்டுப் பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் கல்லூரியில் உயர்தரம் பயிலும் தீவகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், குண்டுத்தோசையை மதிய உணவுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அவர் தீவகத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நுழையும் இராணுவ சோதனைச் சாவடியில் சோதனைக்காக இறக்கி விடப்பட்ட நிலையில் அவரைச் சோதனையிட்ட இராணுவத்தினர் சாப்பாட்டு பெட்டியைக் காட்டி இதனுள் என்ன உள்ளது என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவி குண்டுத்தோசை என்று பதிலளித்துள்ளார்.

அதை கேட்ட இராணுவத்தினர் மீண்டும் மீண்டும் குண்டு குண்டு என்று கேட்டவாறு அந்த உணவுப் பெட்டியினை திறக்கும்படி கூறியதும், மொழித் தொடர்பாடலில் புரிதலற்ற மாணவி ஆம் ஆம் என்று தலையசைத்துள்ளார். அவரின் தலையசைவை குண்டு என்று உறுதிப்படுத்திய இராணுவத்தினர், குண்டுத் தோசைகளை பிய்த்துப் பிய்த்து, சோதனையிட்டனர்.

கைகளால் பிய்த்துப் பிசைந்து மிக மோசமாக சோதனையிடப்பட்ட அந்த குண்டுத் தோசையை இனி உண்ண முடியாது என்ற நிலையில் குறித்த மாணவி உணவுப் பெட்டியுடன் அதனை தூக்கிவீசி விட்டு சென்றதாக தெரியவருகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு