119.3 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்கிய அரசு..!

ஆசிரியர் - Editor I
119.3 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்கிய அரசு..!

உயிா்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் இதுவரையில் 119.3 மில்லியன் ரூபாய் நிதியை இழப்பீடாக வழங்கியுள்ளது. 

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 86மில்லியன் ரூபாவும் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 12.1மில்லியன் ரூபாவும் 

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 21.2மில்லியன் ரூபாவும் நஸ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு சங்ரில்லா விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2.8 மில்லியன் ரூபாவும் 

சினமன் கிராண்ட் விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 1.4மில்லியன் ரூபாவும் கிங்ஸ்பெரி விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 9 இலட்சம் ரூபாவும் தெஹிவளை ட்ரொபிக்கல் இன் விடுதித் தாக்குதலில் 

உயிரிழந்தவர்களுக்கு 1.1 மில்லியன் ரூபாவும் நஸ்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு