வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை.. வர்த்தக சங்கம் கடும் எச்சரிக்கை.

ஆசிரியர் - Editor I
வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை.. வர்த்தக சங்கம் கடும் எச்சரிக்கை.

வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனை வன்மையாக கண்டித்திருக்கும் வவுனியா வர்த்தக சங்கம், 

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தால் வர்த்தக நிலையங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்த வர்த்தக நிலையங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்களுக்கு பகிரங்கமாக கூறுவோம் எனவும் எச்சரித்துள்ளது. 

இந்த விடயம் குறித்து வர்த்தக சங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வவுனியாவில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான அங்க சேஷ்டைகள்இ பாலியல் சீண்டல்கள்இ இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாக 

எமது வர்த்தக சங்கத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. கடந்த இரண்டு தினங்களில் வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரின் மகன் மற்றும் அவருடைய நண்பரான மற்றுமொரு 

வர்த்தக நிலையத்தின் பணியாளர் இணைந்து பெண்ணொருவர் மீது அங்க சேஷ்டை புரிந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

இவ்வாறான வர்தகர்களையும்இ வர்த்தக நிலையங்களையும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்படும் வர்த்தக நிலையங்களையும் வவுனியா வர்த்தக சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இது போன்ற செயற்பாடுகளை எதிர்காலங்களில் இடம்பெறாமல் இருக்க வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று வர்த்தக சங்கம் எச்சரிக்கிறது.

தொடர்ந்தும் இவ்வாறான பாலியல் சேஷ்டைகள்இ இரட்டை அர்த்த வார்த்தைப் பிரயோகங்கள்இ வர்த்தக நிலைய வாயிலில் நின்று இரட்டை அர்த்தத்தில் வாடிக்கையாளர்களை கூவி அழைப்பது போன்ற விடயங்களிற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தங்கள் மேலான கவனத்தை இந்த விடயம் தொடர்பாக செலுத்த வேண்டும் என வர்த்தக சங்கம் கேட்டுக்கொள்வதுடன் எதிர்வரும் காலங்களில் இது போன்ற முறைப்பாடுகள் 

எமக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எதிராக வர்த்தக சங்கம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதையும் பொது மக்களுக்கு குறித்த வர்த்தக நிலையத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகிறது என அறிவிக்கப்படும் எனவும் அறியத்தருகிறோம்.

எனவே எதிர்காலங்களில் இவ்வாறான செயற்பாட்டை தவிர்த்து சமூக அக்கறையுடன் செயல்படுமாறும் வர்த்தகர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கம் அறிவிக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு