போா்குற்றங்களே நடக்கவில்லையாம்..! கூறுவது வேறு யாருமல்ல மஹிந்த.

ஆசிரியர் - Editor I
போா்குற்றங்களே நடக்கவில்லையாம்..! கூறுவது வேறு யாருமல்ல மஹிந்த.

இலங்கையில் போா் குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. என 10வது போா் வெற்றி தினத்தில் தைாியமாக கூறுவேன் என மஹிந்த ராஜபக்ஸ கூறியிருக்கின்றாா். 

யுத்தத்தை வெற்றிக் கொள்ளும் விதமாகவே சர்வதேச போர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அமெரிக்கா உள்ளிட்ட பிரபல்யமாக நாடுகளில் பின்பற்றப்பட்ட போர் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே 

யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார் அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து முப்படையினரின் சேவையினாலேயே நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது. 

எமது நாட்டு இராணுவத்தை விட்டுக்கொடுக்காமல் இனியாவது பெருமைப்படுத்த அரசாங்கம் பழகிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.பல உயிரிழப்புக்களுடன் வெற்றிக் கொண்ட பயங்கரவாதம் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் 

பிறிதொரு அடிப்படைவாத தீவிரவாதத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. சர்வதேசத்துடன் தொடர்புடைய தேசிய தீவிரவாதத்தின் தாக்குதலே அண்மையில் இடம்பெற்றுள்ளது.

விடுதலை புலிகளினால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலினால் கொல்லப்பட்ட உயிர்களை விட அதிகமான உயிரிழப்புக்கள் ஒரு தற்கொலை குண்டுதாரியினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது நாட்டுக்காக போராடிய இராணுவத்தினர் 

தொடர்ந்தும் மதிக்கப்பட வேண்டும். அரசியல் கொள்கைகள் மாற்றமடையும் போது இராணுவத்தினரை ஒருபோதும் வேறுப்படுத்தி அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள கூடாது 

என மகிந்த ராஜபக்ஸ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு