தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியத்தில் தவறில்லை..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியத்தில் தவறில்லை..!

1990ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியதை அப்போதே சாியாகத்தான் நாங்கள் பாா்த்தோம். என ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்த்தா் துளசி கூறியுள்ளாா். 

பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இஸ்லாமியர்களை வடக்கில் இருந்து வெளியேற்றுவதற்கான உண்மைக்காரணம் கிழக்கில் ஏற்பட்ட சில அதிர்வலைகள் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து கொண்டிருந்தபோது சில நாசகார நடவடிக்கைகளுக்காக சில முஸ்லிம்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அதை உணர்ந்து கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பு அந்த காலத்தில் முஸ்லிம்கள் அவ்வாறான ஒரு தாக்குதலை நடத்தியிருந்தால் அது பாரிய உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியிருக்கும்.

ஆகவே முஸ்லிம்களின் நலனை கருத்திற்கொண்டே தேசியத் தலைவர் பிரபாகரன் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு