தடை பல வாினும் முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடுங்கள்.. சீ.வி.அழைப்பு..

ஆசிரியர் - Editor I
தடை பல வாினும் முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடுங்கள்.. சீ.வி.அழைப்பு..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு எந்த பிரச்சினை வந்தாலும் ஒன்று கூடுமாறு முன்னாள் வடமாகாண முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளாா். 

நல்லுாா் ஆலய வீதியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சாின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், வடமாகாண சபையில் நான் அதிகாரத்தில் இருந்த போது மூன்று ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நானே தலைமை தங்கினேன்.

இந்த முறை என்னிடம் தலைமை தங்குமாறு யாரும் கேட்கவில்லை. அது பரவாயில்லை. ஏனெனில் நான் பதவி நிமித்தம் இருந்தபோது எனது தலைமையில் நடைபெற்றது.

ஆனால் இம்முறை முள்ளிவாய்க்கால் அமைந்துள்ள பிரதேச சபையினரின் பொறுப்பில் அது நடைபெறலாம். அத்துடன் உள்ளூர் மக்களும் இணைந்து அனுஷ்ட்டிப்பார்கள்.

அதுமட்டுமல்லாது பல கட்சியினரும் தாங்களும் முள்ளிவாய்க்காலில் வெல்வேறு இடங்களிலும் நினைவு கூறவுள்ளனர். என்னை பொறுத்த வரையில் எனது கட்சியும் இந்த புனிதமான நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளோம். 

அங்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு நினைவு கூறவுள்ளோம். தற்போதைய நாட்டு நிலைமையில் எந்தளவுக்கு இது சாத்தியமாகும் என்று எனக்கு தெரியவில்லை.

இதேவேளை முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்க  பல தரப்புக்களும் அழைப்பு விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு