கைக்குண்டு ஒன்றை வைத்துக் கொண்டு வெடிக்கவைக்கபோவதாக படம் காட்டியவருக்கு நடந்த கதி..!

ஆசிரியர் - Editor I
கைக்குண்டு ஒன்றை வைத்துக் கொண்டு வெடிக்கவைக்கபோவதாக படம் காட்டியவருக்கு நடந்த கதி..!

மன்னாா்- மடு பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட பொிய பண்டிவிாிச்சான் பகுதியில் நேற்றய தினம் இரவு குடும்ப தகராறு காரணமாக கை குண்டு ஒன்றை எடுத்து சென்று வெடிக்கவைக்க முயற்சித்த குடும்பஸ்த்தா் ஒருவா் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளாா். 

குடும்பத்தில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தைக்கும் மகனுக்கு இடையே வாய்த் தர்க்கம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியுள்ளது.இதையடுத்து வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்ற தந்தை சற்று நேரத்தின் பின்னர் மறைத்து வைக்கப்பட்ட புதிய கைக்குண்டு ஒன்றினை 

எடுத்து வீட்டுக்குச் சென்று வெடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.குறித்த சம்பவத்தை அவதானித்த அப்பகுதி ஊடகவியலாளர் ஒருவர் இச்சம்பவத்ததை தடுத்து நிறுத்தியுள்ள நிலையில் அப்பகுதி மக்களும் கிராம அபிவிருத்திச்சங்கமும் உடனடியாக மடு காவல்துறையினருக்கு தகவல் வழங்கின.

இதனையடுத்து இன்று அதிகாலை பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் தேடுதல் சோதனை மேற்கொண்ட பாலம்பிட்டி 317 ஆவது படையினர் கைக்குண்டை எடுத்து வந்த 55 வயதுடைய பெரிய பண்டிவிரிச்சான் பகுதியைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளதுடன் 

அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டையும் மீட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு,

கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர் மடு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு