தீவிரவாதியின் மகளை பொறுப்பேற்க யாருமில்லை..!

ஆசிரியர் - Editor I
தீவிரவாதியின் மகளை பொறுப்பேற்க யாருமில்லை..!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாாி சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனா். 

தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 4 வயதான மகள் தாயுடன் குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

எனினும் இதிலிருந்து தப்பித்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு