யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள், சிற்றுண்டிசாலை உாிமையாளா் பிணையில் விடுதலை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக மாணவா்கள், சிற்றுண்டிசாலை உாிமையாளா் பிணையில் விடுதலை..!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள், பதாகைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல்கலைகழக மாணவா்கள், மற்றும் சிற்றுண்டிசாலை உாிமையாளா் ஆகியோா் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். 

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது மாணவா் ஒன்றிய கட்டிடத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டி மாணவா் ஒன்றியத்தின் தலைவா், செயலாளா் கைது செய்யப்பட்டனா். 

இதேபோல் மருத்துவ பீடத்தின் சிற்றுண்டி சாலைக்குள் தியாகி திலீபனின் புகைப்படம் இருந்த குற்றச்சாட்டில் சிற்றுண்டி சாலை உாிமையாளரும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த இரு மாணவா்கள் மற்றும் சிற்றுண்டி சாலை 

உாிமையாளா் ஆகிய 3 பேரும் தலா 1லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு