ஆவா குழு ரவுடியின் வீட்டை முற்றுகையிட்ட இராணுவம்..! ரவுடி கைது, வாள்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
ஆவா குழு ரவுடியின் வீட்டை முற்றுகையிட்ட இராணுவம்..! ரவுடி கைது, வாள்கள் மீட்பு..

யாழ்.கொக்குவில் பகுதியில் ஆவா குழு ரவுடியின் வீட்டை முற்றுகையிட்ட இராணுவத்தினா் மற்றும் விசேட அதிரடிப்படையினா் வீட்டுக்குள்ளிருந்து வாள்கள், கூாிய ஆயுதங்களை மீட்டுள்ளனா். 

அதனையடுத்து அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்தச் சுற்றிவளைப்பு இன்று புதன்கிழமை காலை 6 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.

இந்தச் சோதனை நடவடிக்கை தொடர்பில் அந்தப் பகுதி மக்களுக்கு இராணுவத்தினரால் முன்னறிவித்தல் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. 

வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருடைய வீடே இவ்வாறு சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. 

அங்கு வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் உரைப் பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு