2009ம் ஆண்டுக்கு பின்னா் பாாிய தாக்குதல்களுக்கு 7 தடவை முயற்சித்த தமிழீழ விடுதலை புலிகள்..!

ஆசிரியர் - Editor I
2009ம் ஆண்டுக்கு பின்னா் பாாிய தாக்குதல்களுக்கு 7 தடவை முயற்சித்த தமிழீழ விடுதலை புலிகள்..!

2009ம் ஆண்டு போா் நிறைவடைந்த பின்னா் தமிழீழ விடுதலை புலிகள் 7 தடவைகள் தாக்குதல் நடாத்த திட்டமிட்டதாக முன்னாள் இராணுவ தளபதி தயா ரட்நாணக்க கூறியுள்ளாா். 

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஊடகங்களோ, மக்களோ யாரும் அறிந்திராத ஓர் விடயத்தை நான் இப்பொழுது கூறுகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகள் போரின் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், 

ஏழு தடவைகள் நாட்டில் பாரிய அழிவுகளை ஏற்படுத்த முயற்சித்தனர். அந்த ஏழு முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டிருந்தது. 

இந்த தாக்குதல் முயற்சிகளுடன் தொடர்புடைய குழுக்கள் முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் சமூகத்திற்கு தெரியாமலேயே மேற்கொள்ளப்பட்டடிருந்தது. 

இது இலங்கை படையினரின் அதி விசேட திறமையாகவே கருதப்பட வேண்டும். உலகின் மிகப் பலம்பொருந்திய உளவுப் பிரிவினர் 

இலங்கை படையினர் மேற்கொண்ட வீர தீர செயற்பாடுகளை இன்றும் பாடமாக கற்று தேர்ந்து வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பாரியளவில் ஆயுதக் கப்பல்கள் காணப்பட்டன. 

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த பாரிய ஆயுதக் கப்பல் ஒன்று இந்தோனேசியாவில் வைத்து அழிக்கப்பட்டது.

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாரிய அயுதக் கப்பல் ஒன்று பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியிருந்தனர்.

இன்று வரையிலும் யாருக்கும் தெரியாத பல்வேறு சாதனைகளை இலங்கைப் படையினர் மேற்கொண்டுள்ளனர் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு