இராணுவத்தினருக்கும் அவா்கள் கைகளில் உள்ள துப்பாக்கிகளுக்கும் பூரண அதிகாரம்..! இராணுவ தளபதி கடும் எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
இராணுவத்தினருக்கும் அவா்கள் கைகளில் உள்ள துப்பாக்கிகளுக்கும் பூரண அதிகாரம்..! இராணுவ தளபதி கடும் எச்சாிக்கை..!

இலங்கையில் பதற்ற நிலமை உருவாகியிருக்கும் நிலையில் இராணுவ தளபதி மஹேஸ் சேனநாயக்க சற்று முன்னா் பொதுமக்களுக்கான எச்சாிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றாா். 

வட மேல் பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.அந்த பகுதியில் சுற்றி திரியும் சிலராலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் குறித்த பகுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் அல்லது ஏனைய நேரங்களில் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் 

சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும்.காணும் இடத்தில் இராணுவத்தினரின் அதிகாரம் முழுமையாக பிரயோகிக்கப்படும். 

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆதரவு வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு