3 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்..! குருநாகல் மாவட்டத்தில் தொடா்கிறது பதற்றம்..

ஆசிரியர் - Editor I
3 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்..! குருநாகல் மாவட்டத்தில் தொடா்கிறது பதற்றம்..

குருநாகல் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 பள்ளிவாசல்கள் மீது இனந்தொியாத நபா்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கின்றது. 

கின்னியம மஸ்ஜிதுல் தக்வா ஜும்மா பள்ளிவாசல் ,  மஸ்ஜிதுல் அப்ரார் தக்கியா பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் ஆயிஷா தக்கியா பள்ளிவாசல் ஆகியவை மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்தியோர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, சிலாபத்தில் நேற்று ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து 

சிலாபம் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு