ஹிஸ்புல்லா மகனுடன் கோத்தாவுக்கு நெருங்கிய தொடர்பு? - வெடிக்கிறது புதிய சர்ச்சை

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் கோத்தபாய ராஜபக்ஸவுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஹிஸ்புல்லாவின் மகனுக்கும், கோத்தபாய ராஜபக்ஸவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பதாக, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே குற்றம் சாட்டியிருந்தார்.
எனினும், அதனை கோத்தாபய ராஜபக்ச மறுத்துள்ளார். தமக்கும் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் இடையில் நெருங்கிய உறவு ஏதும் கிடையாது. அவரது திருமணத்தில் ஒரு விருந்தினராக மாத்திரம் பங்கேற்றேன் என்று கோத்தபாய ராஜபக்ஸ கூறியிருக்கிறார்.
மட்டக்களப்பில் வெளிநாட்டு உதவிகளுடன் கட்டப்பட்டுள்ள ஷரீஆ பல்கலைக்கழகத்தில் 500 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை ஹிஸ்புல்லாவின் மகன் பெற்றுள்ளார். இந்த விடயம், பொரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், இது குறித்து விசாரிக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன உறுதி அளித்துள்ளார்.