சிக்கினான் சீமான்..! வீரவசனம் பேசியவா் கைது..

ஆசிரியர் - Editor I
சிக்கினான் சீமான்..! வீரவசனம் பேசியவா் கைது..

உயிா்த்த ஞாயிறு நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை ஆதாித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவுகளை செய்த வவுனியா மௌலவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். 

வவுனியா செட்டிக்குளம் பள்ளிவாசல் மௌளவியான மொகைதீன் முனாஜித் என்பவரே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

அவர், சவுதி அரேபியாவுக்குச் சென்று நாடு திரும்பிய நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை மதக் கோட்பாடுகளின் 

அடிப்படையில் அவர் ஆதரித்துப் பேசினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இஸ்லாம் கூறுவது போன்று அநீதி இழைத்தவர்களை அழிப்பது பொருத்தமானது 

என அவர் தனது முகநூலில் காணொலிப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு