காணிக்குள் குண்டுகள் இருந்ததை ஏன் பொலிஸாருக்கு சொல்லவில்லை..? காணி துப்புரவு செய்தவரை கைது செய்த இராணுவம்..!

ஆசிரியர் - Editor I
காணிக்குள் குண்டுகள் இருந்ததை ஏன் பொலிஸாருக்கு சொல்லவில்லை..? காணி துப்புரவு செய்தவரை கைது செய்த இராணுவம்..!

யாழ்.வெற்றிலைக்கேணி பகுதியில் ஆட்களற்ற வீடொன்றுக்குள் இருந்து குண்டுகள் மீட்கப்பட்ட விடயம் தொடா்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்காமைக்காக காணியை துப்புரவு செய்த ஒருவா் இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

அது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் வீட்டினை சோதனையிட்டனர். அதன் போது வீட்டினுள் சந்தேகத்திற்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் காணியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது குண்டு போன்றதொரு மர்ம பொருள் ஒன்றினை 

வேலி ஓரம் கண்டு பிடித்துள்ளனர். அது தொடர்பில் அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டு இருந்த பழனி என்பவரிடம் இராணுவத்தினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.அதன் போது அவர் , தான் காணியினை துப்பரவு செய்யும் போது அந்த பொருள் காணப்பட்டதாகவும் , 

தான் அதனை தூக்கி வேலி ஓரமாக வீசி விட்டு தொடர்ந்து துப்பரவு பணியில் ஈடுபடுவதாகவும் , வீட்டு உரிமையாளரின் மகனே தன்னை துப்பரவு பணிக்கு அமர்த்தியதாகவும் கூறியுள்ளார்.அதனை அடுத்து வெடி பொருள் தொடர்பில் தொடர்பில் தகவல் வழங்க தவறிய குற்றசாட்டில் 

அந்நபரை கைது செய்த இராணுவத்தினர் , அவரை பளை காவல்துறையினரிடம்; ஒப்படைத்தனர். பளை காவல்துறையினர் குறித்த நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , வீட்டு உரிமையாளரின் மகனை அழைத்தும் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு