மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸாா் கொலை..! கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை...

ஆசிரியர் - Editor I
மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸாா் கொலை..! கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை...

மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். 

மட்டக்களப்பு, வவுணதீவுப்பகுதியில் பொலிஸார் இருவரை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு ஆறு மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இரு பொலிஸ் அதிகாரிகளும் கொலை செய்யப்பட்டமை விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் மனோ கணேசன் உறுதிப்படுத்தி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு