கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் புதிய சிக்கல்..! எதிா்த்து நிற்கும் ஊடகவியலாளாின் மனைவி..

ஆசிரியர் - Editor I
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதில் புதிய சிக்கல்..! எதிா்த்து நிற்கும் ஊடகவியலாளாின் மனைவி..

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறைத்தண்டணை அனுபவித்துவரும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால் நீதிமன்றம் செல்வேன் என சந்தியா எக்னலியகொட தொிவித்துள்ளாா். 

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென பலரும் கோரி வருகின்றனர். 

இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட, “ஞானசார தேரர் 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். எனக்கு தெரிந்தவரையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால், 

ஜனாதிபதி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும். இதனை தவிர வேறு எந்தவகையிலும் அவரை விடுதலை செய்ய முடியாது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு, பொதுமன்னிப்பு வழங்குவது என்பது, 

நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகவே நான் பார்க்கிறேன். நீதிமன்ற கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்.ஞானசார தேரரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது, 

எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமாக இருந்தால், அதற்கு எதிராக நான் நீதிமன்றம் செல்வேன்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு