தீவிரவாதி சஹ்றானின் மனைவி வெளியிட்ட அதிா்ச்சி தகவல்..! முக்கிய புள்ளிகள் சிக்கபோகிறாா்கள்.

ஆசிரியர் - Editor I
தீவிரவாதி சஹ்றானின் மனைவி வெளியிட்ட அதிா்ச்சி தகவல்..! முக்கிய புள்ளிகள் சிக்கபோகிறாா்கள்.

இலங்கையில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களின் சூத்திரதாாியான சஹ்றான் ஹாசீமின் மனைவி மற்றும் பிள்ளைகள் தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் தற்போது கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்கை பெற்று வருகின்றனா். 

இந்நிலையில் சஹ்றானின் மனைவியிடம் நடாத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அதில் சஹ்றானின் சகாக்கள் தொடா்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

இது தொடர்பில் ஐ.எஸ் பயங்கரவாதத்தின் பின்னாலுள்ள பெரும்புள்ளிகள் சிக்குவார்கள் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இதேவேளை தற்கொலை குண்டுதாரிகளில் இருவர் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு பெற்றுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

ஷங்ரி-லா ஹோட்டலில் தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளும் இவ்வாறு வீடுகளை பெற்றுக்கொண்டதாக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகளான சஹ்ரான் மற்றும் இல்ஹாம் அகமட் ஆகியோர், கல்கிசை, லக்கி பிளாசா, கொள்ளுப்பிட்டி, தெமட்டகொட மகாவில கார்டன், கொச்சிக்கடை, படல்கும்புர, பிபிலை ஆகிய இடங்களில் வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்தனர்.

குறித்த இரண்டு குண்டுதாரிகளும், தமது பாவனைக்காக முச்சக்கர வண்டிகள் இரண்டு, மற்றும் ஐந்து கார்களையும், வாடகைக்கு அமர்த்தியிருந்துள்ளனர் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான சஹ்ரான், அபு பக்தர், என்றும், இல்ஹாம் அகமட், அபு பாரா என்றும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு