ஹிஷ்புல்லாவை பதவி நீக்கு..! முடங்கியது கிழக்கு.

ஆசிரியர் - Editor I
ஹிஷ்புல்லாவை பதவி நீக்கு..! முடங்கியது கிழக்கு.

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்ககோாியும், நியாயமான ஆளுநா் ஒருவரை நியமிக்ககோாியும் கிழக்கு மாகாணத்தில் இன்று பூரண ஹா்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த போராட்டம் கிழக்கினை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இன்று திருகோணமலை நகரத்தில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது.

பள்ளிவாயில்களுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதுடன், அரச பேருந்துகள் மாத்திரம் சேவையில ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை நகர் பகுதியில் பேருந்து ஒன்றிற்கு கல்வீச்சு இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு