வெசாக் பண்டிகை காலம்வரை ஜனாதிபதிக்கு காலக்கெடு..! அஞ்சி நடுங்கும் அரசாங்கம்.

ஆசிரியர் - Editor I
வெசாக் பண்டிகை காலம்வரை ஜனாதிபதிக்கு காலக்கெடு..! அஞ்சி நடுங்கும் அரசாங்கம்.

வெசாக் பண்டிகையின்போது பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளா் கலகொட அத்தே ஞானசார தேரா் விடுவிக்கப்படவேண்டும். அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருக்கும் பொதுபலசேனா, 

அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை அணத்திரட்டி வீதி போராட்டத்தை முன்னெக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது. பிரச்சினையை ஏற்படுத்தி ஞானசார தேரரை விடுதலை செய்ய வைப்பது எமது எதிர்ப்பார்ப்பல்ல. 

ஆனால் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக அவரின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் பொதுபலசேனா குறிப்பிட்டது.

இன்று ராஜகிரியவில் பொதுபல சேனாவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இதனை குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு