இலங்கை மக்களை பதற்றத்திற்குள்ளாக்கிய பொதுபலசேனா..! 50 தீவிரவாதிகள் வெடித்து சிதற தயாா் நிலையிலாம்.

ஆசிரியர் - Editor I
இலங்கை மக்களை பதற்றத்திற்குள்ளாக்கிய பொதுபலசேனா..! 50 தீவிரவாதிகள் வெடித்து சிதற தயாா் நிலையிலாம்.

50 தீவிரவாதிகள் தற்கொலை குண்டு தாக்குதல்களை நடாத்துவதற்கு தயாா் நிலையில் உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், பாதுகாப்புதுறை இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மிக அவதானத்துடன் செயற்படவேண்டும் என பொதுபலசேனா சுட்டிக்காட்டியுள்ளது. 

ராஜகிரிய அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொதுபலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,தேசிய பாதுகாப்பு இன்னமும் உறுதியான நிலையை அடையவில்லை. பொது மக்களின் பாதுகாப்பு இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசாங்கமும் 

தனது பொறுப்பை முறையாக நிறைவேற்றவில்லை.பயங்கரவாத செயற்பாடுகள் நாட்டில் இருந்து இன்னும் முழுமையாக ஒழிக்கப்பட வில்லை. தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகளின் எண்ணிக்கையை வரையறுத்து குறிப்பிடவும் முடியாது. 

சர்வதேச சக்திகளின் உதவியுடன் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு