மீண்டும் ஒரு தடையை விதித்தது அரசு..!

ஆசிரியர் - Editor I
மீண்டும் ஒரு தடையை விதித்தது அரசு..!

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் தொடா்ச்சியாக துப்பாக்கிகள்,  வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் மீட்கப்படுகிறது. இவை தொடர்பான காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின் மூலம் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற காணொளி பதிவுகள் ஊடக நிறுவனங்களில் காணப்பட்டால் அவற்றை ஒளிபரப்ப வேண்டாம் என்பதே அரசாங்கத்தின் கோரிக்கை என அதன் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு