மாணவா்கள் வருகை 60 வீதமாக உயா்ந்தது..! இயல்பு நிலைக்கு திரும்பும் வடமாகாணம்.

ஆசிரியர் - Editor I
மாணவா்கள் வருகை 60 வீதமாக உயா்ந்தது..! இயல்பு நிலைக்கு திரும்பும் வடமாகாணம்.

வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகரித்துவரும் நிலையில் ஓரிரு நாட்களில் மாணவர்களின் வரவு வழமைக்கு வரும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 6-13 வரையான மாணவர்களின் 2 ஆம் தவணை கடந்த திங்கட்கிழமை (6) ஆம் திகதி ஆரம்பமானது. அன்று மாணவர்களின் வரவு 45 வீதமாக காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாணவர்களின் வரவு 46 வீதமாக உயர்ந்திருந்தது. 

நேற்று புதன்கிழமை 60 வீதமாக உயர்ந்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு