ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

ஆசிரியர் - Admin
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதோடு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து சர்வமதத் தலைவர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு