பள்ளிவாசல் கிணற்றுக்குள் வாள்கள், துப்பாக்கிகள்..! அதிா்ந்துபோன பொலிஸாா். (படங்கள் இணைப்பு)

ஆசிரியர் - Editor I
பள்ளிவாசல் கிணற்றுக்குள் வாள்கள், துப்பாக்கிகள்..! அதிா்ந்துபோன பொலிஸாா். (படங்கள் இணைப்பு)

கொழும்பு- மாளிகாவத்தை பகுதியில் உள்ள பிரபல்யமான பள்ளிவாசல் கிணற்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருமளவு வாள்கள், கத்திகள் மற்றும் துப்பாக்கி, சீடி போன்றவற்றை இராணுவம் மக்கள் பொலிஸாா் இணைந்து கைப்பற்றியுள்ளனா். 

சுகததாஸ விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல் வளாகத்திலுள்ள கிணறு ஒன்றிலிருந்து வாள்கள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.

உரப்பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றில் மேலும் பல பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். எம்.எம்.22 துப்பாக்கி, பல்விதமான 46 வாள்கள், சீடிகள் என பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள் தொடர் தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் பயன்படுத்தியதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சீடிகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு