தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சியளிக்கப்பட்ட 7 தற்கொலை தீவிரவாதிகள் சிக்கினா்..!

ஆசிரியர் - Editor I
தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சியளிக்கப்பட்ட 7 தற்கொலை தீவிரவாதிகள் சிக்கினா்..!

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்பில் நன்கு பயிற்சி வழங்கப்பட்ட காத்தான்குடியை சோ்ந்த 7 தற்கொலை குண்டுதாாிகள் ஹம்பாந்தோட்டையில் கைது செய்யபட்டுள்ளனா். 

நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் நெருங்கிய உதவியாளர்களாவர்.

சஹ்ரானின் சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்து வந்துள்ளார்.

இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் அம்பாந்தோட்டையில் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி நீண்ட நாள்களாக அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் நசார் மொகமட் ஆசாத், பயிற்சிகளை வழங்கி வந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு