சுட்டு வீழ்த்தப்படும் விமானப்படை எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
சுட்டு வீழ்த்தப்படும் விமானப்படை எச்சாிக்கை..!

இலங்கையில் ட்ரோன் கமராக்கள் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனுமதியில்லாமல் பறக்கவிடப்படும் ட்ரோன் கமராக்கள் சுட்டு வீழ்த்தப்படும் என விமானப்படை பேச்சாளா் கப்டன் கிகான் செனவிரத்ன எச்சாிக்கை விடுத்துள்ளாா். 

இலங்கையின் வான்பரப்பில், விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கருவிகள் பறக்க விடப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இதனை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தடையை மீறிப் பறக்கும் ட்ரோன் கருவிகள், விமானியில்லா விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையிலும், அண்மைய நாள்களில் கொழும்பு நாரஹேன்பிட்டிய பகுதியிலும், காங்கேசன்துறை பகுதியிலும் ட்ரோன் கருவிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு